பக்கங்கள்

வியாழன், மார்ச் 31, 2005

"எளிய சொற்களில் இனிய குறுந்தொகை"
சங்க இலக்கியத்தில் தொகுப்பு நூல்கள்(Anthologies) எட்டு. அவையே "எட்டுத் தொகை" என்று வழங்கப்படுகின்றன. குறுந்தொகை என்ற பாடல்களின் தொகுப்பு நூல் இருநூற்றைந்து கவிஞர்களின் தேர்ந்தெடுத்த நானூறு(கடவுள் வாழ்த்து நீங்கலாக) பாடல்களைக் கொண்டது. நான்கு அடிப் பாடல்கள் தொடக்கம் எட்டு அடிப் பாடல்கள் (இரண்டு பாடல்கள் விதிவிலக்காக ஒன்பது அடிகளில் அமைந்துள்ளன.) வரை உள்ள இந்தத் தொகுப்பினைச் செய்தவர் பூரிக்கோ என்ற புலவர். தமிழ் இலக்கண மரபு என்பது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் என்ற ஆறுபிரிவுகளைக் கொண்டது. இவற்றில் பொருள் இலக்கணத்தை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாகப் பிரிப்பார்கள். இதில் அகப்பொருள் காதலைப் பேசுவது.
அகப்பொருள் நூலான குறுந்தொகையின் எழுபத்தைந்து பாடல்கள் கீழ்வரும் நூலில் நவீன கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளன.

நூல்: "எளிய சொற்களில் இனிய குறுந்தொகை"
ஆசிரியர்: மு.ரா. பெருமாள் முதலியார்
வெளியீடு: 1985, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

1 கருத்து: