பிற மொழி இலக்கியங்களின்மீது,முக்கியமாக பிரெஞ்சு இலக்கியத்தின் மீது ஆர்வமுடையவர்கள்,படிக்கவேண்டிய ஒரு இணையத்தளம்:
http://www.exilivre.com
எமில் ஸோலா,பல்ஸாக்,ஆந்த்ரே ஜீத்,விக்டர் ஹியூகோ என்று பலவேறு பிரெஞ்சு எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் மற்றும் அவர்களது ஆக்கங்களிற் சிலவற்றின் மொழியாக்கம் என்பன ஒரு நல்ல வாசக அனுபவத்தைத் தருகின்றன. "கரும்பாயிரம்" என்பவரின் தமிழாக்கம் மிகவும் மெச்சும் படியாக அமைந்திருக்கின்றது.எடுத்துக் காட்டாக ஆந்த்ரே ஜீத் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்யும் போது நீட்ஷேயின் "அவ்வாறுரைத்தான் ஷரதுஸ்டா" என்ற தத்துவார்த்த நூலின் அற்புதமான வாசகங்களுடன் ஒப்பீடு செய்து எழுதிச் செல்வது கரும்பாயிரம் அவர்களுக்கு அவற்றின் பால் உள்ள ஈடுபாட்டினைக் காட்டுகின்றது.இன்னும் நிறையவே நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக