
நான் விரும்பும் நிறவாதத்திற்கு எதிரான ஒரு போராளி, Race & Class சஞ்சிகையின் ஆசிரியர் A.சிவானந்தன் அவர்கள். சிவானந்தனின் பலவேறு பரிமாணங்களை, அவருடனான செவ்வியினூடாக தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் பதிவுகள் சஞ்சிகையில் நண்பர் ஜமுனா ராஜேந்திரன் அவர்கள். அறுபதுகளில் இருந்து நிறவாத, இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் A. சிவானந்தன் லண்டனில் Institute of Race Relations இயக்குனராகவும் அதன் வெளியீடான Race & Class சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருப்பவர். நிறவாதம், இனவாதம், இங்கிலாந்தில் நிறவாத எதிர்ப்புப் போராட்டங்கள் போன்ற விடயங்களில் பல நல்ல நூல்களை எழுதியுள்ளார்.
"நினைவுகள் சாகும் வேளை..." (When memory dies)என்ற அவரது நாவல் சிவானந்தன் என்ற மனிதனுக்குள் இருந்த மகத்தனா படைப்பாளி, கதைசொல்லி ஒருவனை காலந்தாழ்த்தி இனங்காட்டியது.
இங்கிலாந்திலும் மற்றும் உலகநாடுகள் பலவற்றிலும் நிறவாத எதிர்ப்பு ஊர்வலங்களில், மகாநாடுகளில் A. சிவானந்தனின் குரல் சண்டமாருதமாக ஒலிக்கும். உலகமயமாக்கம், ஏகாதிபத்தியம் என்பவற்றுக்கும் நிறவாதம், இனவாதம் மற்றும் பல சமூகங்களின் இன்றைய இடப்பெயர்வு போன்றவற்றுகிடையிலான தொடர்புகள் பற்றிய அவரது பல கட்டுரைகள் முக்கியமானவை. இங்கிலாந்தை "land of thiefs" என்று குறிப்பிடுவார். ஐரோப்பிய நிறவாதத்திற்கெதிராக ஓங்கி ஒலிக்கின்ற இறுதிக்குரல் A. சிவானந்தன் என்று சொல்வார்கள்.மேலும் அறிய விரும்புவோருக்கு கீழே சில தொடுப்புக்கள்:
http://www.irr.org.uk/2004/october/ha000024.html
The Guardian Profile: Ambalavaner Sivanandan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக