பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 25, 2005

கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை

கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார். இன்று அவரது இறுதிக் கிரிகைகள் இலண்டனில் நடைபெற்றது. நீண்ட நாட்களாகவே சிறுநீரகக் கோளாறினால் அவதிபட்டு சில நாட்களாக நினைவிழந்த நிலையில், அவரது மகள் மாதவி சிவலீலன் அவர்களது தயவில் இருந்தார்.
60 , 70 களில் ஈழத்தின் பல கவியரங்குகளில் கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மரபு வழிக் கவிதைகளைப் பலர் கேட்டிருப்பீர்கள். „ஈழத்து இசை நாடக வரலாறு“, „வட இலங்கை நாட்டார் அரங்கு“, „மலையகக் கூத்து மரபு“ போன்றவை அவரது அண்மைய நூல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக