கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார். இன்று அவரது இறுதிக் கிரிகைகள் இலண்டனில் நடைபெற்றது. நீண்ட நாட்களாகவே சிறுநீரகக் கோளாறினால் அவதிபட்டு சில நாட்களாக நினைவிழந்த நிலையில், அவரது மகள் மாதவி சிவலீலன் அவர்களது தயவில் இருந்தார்.
60 , 70 களில் ஈழத்தின் பல கவியரங்குகளில் கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை அவர்களின் மரபு வழிக் கவிதைகளைப் பலர் கேட்டிருப்பீர்கள். „ஈழத்து இசை நாடக வரலாறு“, „வட இலங்கை நாட்டார் அரங்கு“, „மலையகக் கூத்து மரபு“ போன்றவை அவரது அண்மைய நூல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக